ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்
எடுத்த காரியங்களில் வெற்றி, அடைய அஞ்சனை மைந்தன் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரைத் தொழுது அவரடி பணிந்தால், அவர் நம்மை காத்து,
நற்காரிய வெற்றியை அளிப்பார்.
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை அமாவாசை தோறும் வணங்கி வர, மூதாதையர் சாபம் நீங்கி நல் வாழ்வு பெறலாம்.
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை புதன் கிழமைகளில் வணங்க ஞானமும், பவுர்ணமி நாட்களில் வணங்கி வர, நற்செல்வமும் வந்து சேரும்!
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயரை துதித்து வணங்கிக்கூற வேண்டிய மந்திரம்,
ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயாய நமோ நமஹ
ஸ்ரீ ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்
சந்நிதி
திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.
ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!
ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.
