Friday, 5 July 2013

ஸ்ரீ யோஹ நரசிம்மர்

சர்வ காரிய சித்தி தரும்,
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
ஸ்ரீ புருஷ கேசரி மஹா பீடம்
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்  352/2012

5/87, அழகாபுரி மெயின் ரோடு,
சீனியாபுரம்,பாவாலி அஞ்சல்,
விருதுநகர் - 626001.
ஸ்ரீ யோஹ நரசிம்மர்



கலியுகத்தில் எம பயம்,பித்ரு பயம்,சத்துரு பயம், ருண பயம் [ பிறவிக் கடன் ] மற்றும் பணக்கடன் பிரச்னையில் சிக்கி உளழும் யாவருக்கும் அக்கடன் பிரச்னையை நல்ல முறையில் தீர்க்க அருள் புரிவார் ஸ்ரீ யோக நரசிம்ஹர்.

மேலும், மானிடப்பிறவியின் நல் வாழ்வு பலனை நேரிய வழியில் அனுபவிக்க ,அல்லல் தரும் வாழ்வியல் துயரில் சிக்கி வாடும் மனிதர்களைப் பிறவிப்பிணியிலிருந்து காக்க, கலியுக தெய்வம்,காக்கும் கடவுள் ஸ்ரீ யோஹ நரசிம்மர்  வழிபாடு நம்மை உய்விக்கும்.

ஸ்ரீ யோஹ நரசிம்ஹாய நமோ நமஹா

எனும் ஸ்ரீ யோஹ நரசிம்மர் மூல மந்திரத்தை , வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதும் , முக்கிய காரியங்களின் போதும் 12 முறை மனதார உச்சரித்து வர, அனைத்து காரிய வெற்றி மற்றும் நற்பலன்கள் ஏற்படும்.
வெள்ளிக்கிழமை தோறும் உச்சரித்து வர, ஏழேழு ஜென்ம பாவங்களும் விலகி , குடும்ப நிம்மதி , மன சந்தோசம் ஏற்படும்.

* * * 
                                                        
ஸ்ரீ யோஹ நரசிம்மர் சந்நிதி
திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.