Monday, 22 July 2013

ஸ்ரீ சக்கராத்தாழ்வார்

காக்கும் கடவுள் ஸ்ரீ சக்கராத்தாழ்வார்

கலியுகத்தில் மனிதன் , பிறவிப்பெருங்கடல் சுழலில் சிக்கி, சிறு துரும்பு கிடைக்காதா கரை சேர, என ஏங்கித்தவிக்கும் வேளையில், நான் இருக்கிறேன் உனக்கு , நீ நினைக்கும் துரும்பாக இல்லை, ஆழ்கடலில் நிம்மதியாக வழிநடத்தி உன்னைக் கரை தேற்றும் ஞானக்கப்பலாக, என கலியுக மாந்தர் அனைவரையும், அரவணைத்துக் கடைத் தேற்றும் அற்புத காக்கும் தெய்வம் தான் ஸ்ரீ சக்கராத்தாழ்வார். 

ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை சரணாகதி அடைந்து அவர் தம் தாழ் பணிந்தால், நம் பாவ வினைகளைப் போக்கி, நல் வாழ்வு அமைத்துக்கொடுத்து , நற்கதி அளிப்பார்.

கலியுகக் காவல் தெய்வம் ஸ்ரீ சக்கராத்தாழ்வார் , இப்பிறவியில் நாம் அறியாமல் செய்த பாவத்தை அழித்து நம்மைக் காப்பார். மேலும், அல்லலில் சிக்கித்தவிக்கும் மனிதனுக்கு தேவைப்படும் ஆத்ம பலம், மனோ பலம்,திட பலம்,உடல் பலம் மற்றும் உள்ள பலம் அளித்து அஞ்ஞான இருள் அகற்றி நல் வாழ்வு பெற அருள் புரிவார்.

இப்பிறவி பாதிப்புகளை அகற்றி மனிதனை , நல்வாழ்வு வாழ அருள் புரியும் கலியுகக் காக்கும் தெய்வம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், பத மலர்களில் சரணடைவோம்,ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அருள் பெற்று அற்புத வாழ்வு அடைவோம்!

ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அருள் பெற தினமும் காலை வேளைகளில் , அவரை வணங்கி உச்சரிக்க வேண்டிய திரு மந்திரம்,


ஸ்ரீ சுதர்சன அஸ்திராய பட்

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சந்நிதி

திருப்பணிகள் இறையருளால் , நடக்க இருக்கின்றன.

ஆலயம் தொழுவோம்! இறையருள் பெற்று இனிதே வாழ்வோம்!

ஆலய ட்ரஸ்டி,
ஸ்ரீ சக்ரா ட்ரஸ்ட்.